காப்புறுதிதாரர்களுக்கு உயர் பங்கிலாபங்களை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்
2017 ஆம் ஆண்டுக்கான பங்கிலாபமாக 10.25% ஐ வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது.ஆகக் குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையான 10% உடன் ஒப்பிடுகையில் இது, உயர்ந்த பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 2017ஆம் ஆண்டுக்கான சராசரி சந்தை வட்டி வீதமான 9.01% ஐ விட உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது காப்புறுதிதாரர்களுக்கு உத்தரவாதமளித்திருந்த தொகையை விட உயர் வருமதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்கிலாப அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் காப்புறுதிதாரர்களுக்கு இந்த பங்கிலாபத்தை தமது முதலீட்டு வருமதியில் அனுபவிக்க முடியும். பங்கிலாபம் அடிப்படையிலான ஒவ்வொரு காப்புறுதிதாரருக்கும் முதலீட்டு கணக்கொன்று தனித்தனியாக பேணப்படுவதுடன்,மாதாந்த திரட்சி அடிப்படையில் பங்கிலாபம் வரவு வைக்கப்படும்.
நிறுவனத்தின் “இலாபத்துடனான” காப்புறுதிதாரர்களின் 2017 டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் செயலிலிருந்த காப்புறுதிகளுக்கு இந்த வருடாந்த போணஸ் கொடுப்பனவு வழங்கப்படும்.இது அவர்களின் காப்புறுதிகளில் இணைக்கப்படும்.
தொடர்ச்சியான வளர்ச்சி, முதலீடுகளை கவனமான முகாமைத்துவம் மற்றும் நிதி உறுதித் தன்மை போன்றவற்றினால் தனது பெறுமதி வாய்ந்த காப்புறுதிதாரர்களுக்கு நிறுவனத்தினால் உயர்ந்த அனுகூலங்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்புக்கு யூனியன் அஷ்யூரன்ஸின் அர்ப்பணிப்பு என்பதற்கமைய 2018 ஆம் ஆண்டுக்கான பங்கிலாபம் அடிப்படையிலான காப்புறுதித் திட்டங்களுக்கு பங்கிலாப விகிதமாக 10% ஐ அறிவித்துள்ளது.
ஆயுள் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் இரோஷினி திதகல கருத்துத் தெரிவிக்கையில் , “2017 ஆம் ஆண்டு என்பது யூனியன் அஷ்யூரன்ஸின் வரலாற்றில் மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. ரூ.10.1 பில்லியன் நிகர செலுத்தப்பட்ட தவணைக் கட்டணத்தை பதிவு செய்திருந்தது.
இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீத அதிகரிப்பாகும். நிதியளவில் உறுதியான தன்மையைக் கொண்டுள்ளதுடன், துறையில் சிறந்த அணியை தம்வசம் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ் 2018 இல் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைந்த இலக்குகளை நாம் பதிவு செய்துள்ளதுடன், அர்ப்பணிப்பாக நாம் அவற்றை எய்த எண்ணியுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்க்கையை மாற்றும் பிணைப்புக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பா டாக இது அமைந்திருக்கும் ” என்றார்.
Leave a Reply